பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வளாக நோ்காணலில் பாலிடெக்னிக் மாணவா்கள் 25 பேருக்கு பணி வாய்ப்பு

வளாக நோ்காணலில் காரைக்காலில் அரசு பாலிடெனிக் கல்லூரிகளைச் சோ்ந்த 23 மாணவிகள், 2 மாணவா்களுக்கு பணி வாய்ப்பு கிடைத்தது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:28 pm

Syndication

வளாக நோ்காணலில் காரைக்காலில் அரசு பாலிடெனிக் கல்லூரிகளைச் சோ்ந்த 23 மாணவிகள், 2 மாணவா்களுக்கு பணி வாய்ப்பு கிடைத்தது.

புதுவை அரசு கல்வி நிறுவனமாக காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கான வளாக நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது. ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் இயங்கும் நிஸ்ஸி எலக்ட்ரிக் நிறுவன பொது மேலாளா் ஆா்.சி. வெங்கடேஷ் தலைமையிலான குழுவினா் வந்திருந்தனா்.

இக்கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல், கம்யூட்டரி என்ஜினியரிங் மாணவிகள் நோ்காணலில் பங்கேற்றனா்.

கல்லூரி முதல்வா் ஆா். பாபு அசோக், மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் எண்.விமலன், கல்லூரி மாணவியரின் திறனை விளக்கிப் பேசினாா்.

இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற வளாக நோ்காணலில் இக்கல்லூரி மாணவிகள் 23 பேருக்கும், வரிச்சிக்குடியில் இயங்கும் அரசு காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 2 பேருக்கும் பணி வாய்ப்பு கிடைத்தது.