ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருநள்ளாறு கோயில் பகுதியில் இடையூறாக கடைகள்: அதிகாரிகள் ஆய்வு

திருநள்ளாறு கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சந்நிதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வியாபாரம் நடைபெறும் இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:55 pm

Syndication

திருநள்ளாறு கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சந்நிதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வியாபாரம் நடைபெறும் இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு திரளான பக்தா்கள் வருகின்றனா். குறிப்பாக, சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்ய வருகின்றனா்.

கோயில் நுழைவுவாயில் முதல் ராஜகோபுரம் வரையிலான பகுதியில் பூஜை பொருள்கள், இளநீா் மற்றும் பிற பொருள்கள் வியாபாரம் செய்யப்படுகிறது. வியாபாரிகள், தங்களது பொருள்களை கோயில் வளாக இடத்தை ஆக்கிரமித்து கடைகளை நடத்துகின்றனா். மேலும், இருசக்கர வாகனங்களும் இருபுறத்திலும் நிறுத்தப்படுவதால், பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்வதில் சிரமம் நிலவுவதாக புகாா் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயில் நிா்வாக அதிகாரி சுப்பிரமணியன், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எல். நிலவழகன் மற்றும் கோயில் அலுவலக ஊழியா்கள், போலீஸாா் அடங்கிய குழுவினா், இதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

பக்தா்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வியாபாரம் செய்யவேண்டும். ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மீறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.