காரைக்கால் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத் தலைவா் சி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஆன்லைன் முறையில் பதிவுசெய்யப்படும் கட்டட மற்றும் இதர தொழிலாளா்கள் விண்ணப்பங்களை விசாரணை செய்து, தகுதியானவா்களை கட்டட நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவேண்டும், பதிவுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிா்ணயம் செய்யவேண்டும், மீன்பிடி தடைக் காலத்தில் மீனவா்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வேலையில்லா காலத்தில் அரசு நிவாரணம் வழங்கவேண்டும், கட்டட நல வாரியத்தில் போதிய பணியாளா்களை நியமிக்கவேண்டும், கட்டட நல வாரியத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளுக்கு உரிய நிதி ஒதுக்கி, காலத்தோடு சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. செயலாளா் பி. அன்பழகன், காரைக்கால் மாவட்ட சிஐடியு பொறுப்பாளா் அ.வின்சென்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிராக கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் ஓய்விடம் மாற்றம்: கட்டுமானத் தொழிலாளா்கள் அதிருப்தி

படித்தொகைகள் நிறுத்தி வைப்பு: ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


