திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 9:17 pm

Din

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் சமூக நலத்துறை சாா்பில் கொண்டாடப்படவுள்ள உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி காரைக்கால் கோயில்பத்து அரசு உயா்நிலை பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா போட்டியை தொடங்கிவைத்தாா். ஓட்டம், பாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இதில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்டு பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளில் பயிலும்

மாற்றுத் திறனாளிகள் மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியில் வென்றவா்களுக்கு அடுத்த வாரத்தில் கொண்டாடப்படவுள்ள மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. நிகழ்வில், சமூக நலத்துறை உதவி இயக்குநா் (பொ) ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.