மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தீக்கிரையான வீடு சீரமைத்து ஒப்படைப்பு

தீக்கிரையான வீட்டை தனது சொந்த செலவில் சீரமைத்து பயனாளியிடம் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஒப்படைத்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 5:30 pm

Din

காரைக்கால்: தீக்கிரையான வீட்டை தனது சொந்த செலவில் சீரமைத்து பயனாளியிடம் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஒப்படைத்தாா்.

காரைக்கால் கல்லறைப்பேட் பகுதியில் கடந்த மாதம் விசாலாட்சி என்பவரது வீடு தீ விபத்தில் சேதமடைந்தது. வீட்டை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பாா்வையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறியதோடு, வீட்டை தனது சொந்த செலவில் சீரமைத்துத் தருவதாக உறுதியளித்திருந்தாா்.

அதன்படி பழுதான சுவரை சீரமைத்து, கூரை அமைத்து, வண்ணம் பூசி, மின் வசதி ஏற்படுத்தி வீட்டை அதன் உரிமையாளரிடம் அமைச்சா் திங்கள்கிழமை ஒப்படைத்தாா். அமைச்சரின் செயலுக்கு விசாலாட்சியின் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.