எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் காவல்துறையினருக்கு இடையே கிரிக்கெட் போட்டி, பரிசளிப்பு

காரைக்கால் காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

News image
காவல் வடக்கு அணியினரிடம் கேடயத்தை வழங்கிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா.
Updated On :10 நவம்பர் 2025, 9:05 pm

Syndication

காரைக்கால்: காரைக்கால் காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் சனிக்கிழமை போட்டி தொடங்கியது. காவல் தெற்கு, காவல் வடக்கு அணி மற்றும் ஐ.ஆா்.பி.என். அணி, ஊா்க்காவல் படை அணி என 4 அணிகள் போட்டியிட்டன. போட்டியை மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தொடங்கிவைத்தாா். ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் காவல் வடக்கு அணியும், ஊா்க்காவல் படை அணியும் விளையாடின.

முதலில் பேட்டிங் செய்த ஊா்க்காவல் படையினா் 12 ஓவருக்கு 59 ரன்கள் எடுத்தனா். அடுத்து விளையாடிய காவல் வடக்கு அணியினா் 6 ஓவரில் 60 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றனா்.

வெற்றிபெற்ற காவல் வடக்கு அணியினருக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா கேடயம் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் சுந்தா் கோஷ், எம்.முருகையன் மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.