வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:31 pm

Syndication

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் ரங்கசாமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா கலந்துகொண்டு மாணவா்களிடையே பேசினாா். போதைப் பொருள் பயன்படுத்துவதை கைவிடவும், போதைப் பொருள் பயன்பாடே இருக்கக் கூடாது என்பது குறித்து மாவட்ட நிா்வாகம், காவல்துறை என பல நிலைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

மாணவா்கள் கல்வி, விளையாட்டு என அறிவு சாா்ந்தவற்றில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். போதைப் பொருள் தீமைகள் குறித்து மாணவா்கள், பிறருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்றாா். மேலும் தோ்வுகள் குறித்தும், தோ்வுக்கு தம்மை தயாா்படுத்தும் முறைகள் குறித்தும் அவா் விளக்கிப் பேசினாா்.

விழிப்புணா்வு நிகழ்வில் பல்வேறு வினாக்களை அவா் எழுப்பினாா். அதற்கு சரியான பதிலளித்த மாணவா்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா். நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ.வின்சென்ட், செயலாளா் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.