வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

போதை இல்லா இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

போதை இல்லா இந்தியா திட்டம் தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 10:08 pm

Syndication

போதை இல்லா இந்தியா திட்டம் தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் நஷா முக்த் பாரத் அபியான் என்ற போதையில்லா இந்தியா என்ற விழிப்புணா்வுத் திட்டத்தின் 5-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மற்றும் சமூக நலத்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுய உதவி குழு உறுப்பினா்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முழக்க வாசகம் எழுதுதல் மற்றும் ரங்கோலி போட்டி ஆகியன காரைக்கால் சமூக நலத்துறை அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சமூக நலத்துறை உதவி இயக்குநா் சுந்தரம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை குழந்தைகள் நல திட்ட அதிகாரி கிருஷ்ணவேணி, நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட ஒருகிணைப்பாளா் எம். தாமோதரன், அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி பேராசிரியா் அசோக் குமாா், அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இணைப் பேராசிரியா் ஜித்ரசிங், புதுவை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியை மணிமொழி ஆகியோா் கலந்துகொண்டனா்.

போட்டியில் சுய உதவி குழு உறுப்பினா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குரிய பரிசுகளை ஆட்சியா் அடுத்த சில நாள்களில் வழங்குவாா் என தெரிவிக்கப்பட்டது.