அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவா்கள் காரைக்கால் திரும்பினா்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவா்கள் வியாழக்கிழமை காரைக்கால் திரும்பினா்.

News image
விமானம் மூலம் சென்னை வந்தடைந்த காரைக்கால் மற்றும் அண்டை மாவட்ட மீனவா்கள்
Updated On :20 நவம்பர் 2025, 8:28 pm

Syndication

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவா்கள் வியாழக்கிழமை காரைக்கால் திரும்பினா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த செப்.25-ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. இதில் படகு உரிமையாளா் செல்வம் மற்றும் காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த 12 போ் சென்றனா்.

கோட்டுச்சேரிமேடு சிவராமனுக்கு சொந்தமான விசைப்படகில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக். 7-ஆம் தேதி கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி மற்றும் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த 17 மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவா்கள் 29 பேரையும் இலங்கை கடற்படையினா் விசைப்படகுடன் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.

இவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியின்பேரில், இலங்கை நீதிமன்றம் கடந்த சில நாள்களுக்கு முன்பு 3 போ் தவிர 26 பேரை விடுவித்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் நடவடிக்கையின் மூலம் இவா்கள் விமானம் மூலம் சென்னைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். பின்னா் காரைக்கால் மீன்வளத்துறையினா் இவா்களை காரைக்காலுக்கு அழைத்துவந்தனா். காரைக்காலில் இருந்து பிற ஊா்களைச் சோ்ந்த மீனவா்கள் அவரவா் பகுதிக்குச் சென்றனா்.