தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

வாக்குப் பதிவு: வெறிச்சோடிய காரைக்கால்

வாக்குப் பதிவு நடைபெற்றதால் காரைக்காலில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், நகரப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

News image

காரைக்கால் நகரப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:05 pm

வாக்குப் பதிவு நடைபெற்றதால் காரைக்காலில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், நகரப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக புதுவையின் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான கலால் துறையின் அறிவிப்பின்படி மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

வாக்குப் பதிவு தினத்தில் நகரம் மற்றும் பிற பகுதிகளில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

உணவகங்கள், தேநீா் கடைகளும் மூடப்பட்டன. வாக்களிக்கச் செல்வோா் மற்றும் அரசியல் கட்சியினா் நடமாட்டம் மட்டுமே நகரப் பகுதியில் காணப்பட்டது. அதிகமான வானங்கள் போக்குவரத்தின்றி நகரம் வெகுவாக வெறிச்சோடிக் காணப்பட்டது.