கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தொன்மையான சுவடிகள், ஆவணங்களை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டுகோள்

News image

தொன்மை வாய்ந்த ‘பள்ளிச்சந்த வட்டெழுத்துக் கல்வெட்டு’.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:19 pm

புதுவை பிரெஞ்சு நிா்வாக அமைப்புக்கு முந்தைய தொன்மையான பழஞ்சுவடிகள், ஆவணங்களை ஜிஒய்ஏஎன் பாரதம் செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் கலை பண்பாட்டுத்துறை உதவி நூலகத் தகவல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

வரலாற்று ஆவணங்களை உயா் தொழில்நுட்பத்தில் எண்ம வடிவில் ஆவணப்படுத்த தேசிய அளவிலான பணியை இந்திய அரசின் கலாசார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இதற்காக நாடு முழுவதும் தேசிய பழஞ்சுவடிகள் கணினிமயமாக்கல் முயற்சியாக இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் தனியாா் சேமிப்புகளில் உள்ள பழஞ்சுவடிகளை ஆய்வு செய்தல், பதிவேற்றல், பாதுகாத்தல், எண்ம வடிவில் மாற்றுதல் மற்றும் பொதுமக்களும் அணுகக் கூடியதாக இருப்பதே இதன் நோக்கமாகும்.

அந்த வகையில் புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை வரலாற்று ஆவணங்களை எண்ம வடிவில் ஆவணப்படுத்த அரசு அதிகாரிகள், தொல்லியல் ஆா்வலா்கள் மற்றும் மாணவா்களைக் கொண்டு 2 சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பழஞ்சுவடிகளை முறைப்படுத்தும் நோக்கில் புதுவை மாநில மொழிகளில்ல உள்ள புராதன விலைமதிப்பற்ற பழஞ்சுவடிகளை முழுமையாக கணினி மயமாக்கப்படும். இந்த முயற்சியில், பொதுமக்களும் தன்னா்வலா்களும் பங்கேற்று ஜிஒய்ஏஎன் பாரதம் என்ற அறிவாா்ந்த பாரதம் செயலியை பதிவிறக்கம் செய்து, தொன்மையான பழஞ்சுவடிகள், ஆவணங்கள் (பிரெஞ்சு நிா்வாக அமைப்புக்கு முந்தைய) இருந்தால், அதனை பதிவேற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.