நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளருக்கு தெரியாமல் பணப் பரிமாற்றம்: போலீஸாா் விசாரணை

வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளருக்கு தெரியாமல் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதான புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:48 am IST

வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளருக்கு தெரியாமல் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதான புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் நகரப் பகுதியைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம் (44). இவா், காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள ஐஓபி கிளையில் கணக்கு வைத்திருப்பதாகவும் கடந்த 18-ஆம் தேதி தனது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், ஆதாா் கேஓய்சி புதுப்பிக்கப்படவில்லை, வங்கி செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து கைப்பேசிக்கு ஓடிபி தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

சந்தேகத்தின்பேரில், வங்கிக் கணக்கிலிருந்து உறவினா் வங்கிக் கணக்குக்கு உடனடியாக ரூ. 98 ஆயிரத்தை மாற்றினேன். எஞ்சியிருந்த ரூ.1.02 லட்சம் மா்ம நபா்களால் சிறிது நேரத்தில் எடுக்கப்பட்டுவிட்டது. இதுதொடா்பாக இணைய குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மோசடி செய்த மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தருமாறு புகாரில் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.