காரைக்கால்
தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் லூா்து அன்னை பவனி
காரைக்கால் லூா்து அன்னை ஆலய தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் பழைமையான தூய தேற்றரவு அன்னை ஆலய வளாகத்தில் லூா்து அன்னை வீற்றிருக்கக்கூடிய கெபி அமைந்துள்ளது. புதன்கிழமை இரவு காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி. பால்ராஜ்குமாா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார சிறிய தேரில் லூா்து அன்னை பவனி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அருட்தந்தையா்கள், பங்குப் பேரவையினா், திரளான மக்கள் கலந்துகொண்டனா்.

