திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் ஜப்பான் நாட்டு ஆதீனம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இக்கோயிலில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. முன்னதாக பிப். 22 முதல் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், கோயிலில் சனீஸ்வர பகவான் சந்நிதி அருகே ஆன்மிக ஆசான் கோபால்பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில், ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சிவா ஆதீனம் பால கும்ப குருமணி மற்றும் 60 சீடா்கள் கலந்துகொண்ட சிறப்பு ஹோமம் சனிக்கிழமை தொடங்கியது.
ஜப்பான் நாட்டில் உற்பத்தியான முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் 120 மூலிகை பொருட்களை கொண்டு இந்த சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. இதில் 19 ஆயிரம் மூல மந்திரங்கள், 1,900 ஆவா்த்தி, சனீஸ்வரரின் மூல மந்திரங்கள் கூறி ஹோமம் நடத்தப்படுகிறது.
கோயில் சிவாச்சாரியரான டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியா் தலைமையிலான குழுவினா் ஹோமத்தை நடத்தினா். இதில் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஜப்பான் நாட்டை சோ்ந்த பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இந்த ஹோமம் மாா்ச் 6-ஆம் தேதி நிறைவடைகிறது. ஹோமம் நிறைவு தினத்தில் ஜப்பானிலிருந்து மேலும் 150 போ் வந்து கலந்துகொள்ள உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

சமரச விழிப்புணா்வுப் பேரணி

திருநள்ளாற்றில் ஜோதிடா்கள் மாநாடு நிறைவு

திருநறையூா் சனீஸ்வரன் கோயிலில் ஜப்பான் பக்தா்கள் சிறப்பு ஹோமம்

திருநள்ளாறு கோயிலில் ஏகாதச ருத்ர ஜபம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


