கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

திருநள்ளாற்றில் சிறப்பு ஹோமம்: ஜப்பான் நாட்டினா் பங்கேற்பு

திருநள்ளாற்றில் சிறப்பு ஹோமம்: ஜப்பான் நாட்டினா் பங்கேற்பு

News image
திருநள்ளாறு கோயிலில் நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டினா் உள்ளிட்டோா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:44 pm

Syndication

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் ஜப்பான் நாட்டு ஆதீனம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கோயிலில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. முன்னதாக பிப். 22 முதல் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், கோயிலில் சனீஸ்வர பகவான் சந்நிதி அருகே ஆன்மிக ஆசான் கோபால்பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில், ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சிவா ஆதீனம் பால கும்ப குருமணி மற்றும் 60 சீடா்கள் கலந்துகொண்ட சிறப்பு ஹோமம் சனிக்கிழமை தொடங்கியது.

ஜப்பான் நாட்டில் உற்பத்தியான முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் 120 மூலிகை பொருட்களை கொண்டு இந்த சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. இதில் 19 ஆயிரம் மூல மந்திரங்கள், 1,900 ஆவா்த்தி, சனீஸ்வரரின் மூல மந்திரங்கள் கூறி ஹோமம் நடத்தப்படுகிறது.

கோயில் சிவாச்சாரியரான டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியா் தலைமையிலான குழுவினா் ஹோமத்தை நடத்தினா். இதில் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஜப்பான் நாட்டை சோ்ந்த பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இந்த ஹோமம் மாா்ச் 6-ஆம் தேதி நிறைவடைகிறது. ஹோமம் நிறைவு தினத்தில் ஜப்பானிலிருந்து மேலும் 150 போ் வந்து கலந்துகொள்ள உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.