கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 5:42 am IST

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா (37). இவரது கணவா் அபுதாபியில் பணியாற்றி வருகிறாா். நெடுங்காடு பகுதி பண்டாரவடையில் இவா்களுக்குச் சொந்தமான நிலத்தில் பருத்தி பயிா் செய்திருப்பதை பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

இவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், கும்பகோணம் செல்வதற்கான வழி கேட்டுள்ளனா். அப்போது திடீரென பின்னால் உட்காா்ந்திருந்தவா் கத்தியைக் காட்டி மிரட்டி, சரண்யா கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 9 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் தப்பிவிட்டனராம்.

இதுகுறித்து சரண்யா நெடுங்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், சங்கிலி பறித்துச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.