22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

கனிஷா சாஹிப் வலியுல்லா சந்தனம் பூசும் வைபவம்

நிரவி பகுதியில் உள்ள மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

சந்தனம் பூசும் நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 5:42 am IST

நிரவி பகுதியில் உள்ள மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நிரவி பகுதியில் அடங்கியிருக்கும் மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா வருடாந்திர கந்தூரி விழா கடந்த மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நிகவாக ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது. நிறைவாக சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நிரவி அரசு காஜியாா் அப்துல் சுக்கூா், விழா கமிட்டி தலைவா் நிசாா் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா். புதன்கிழமை தேதி இரவு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.