சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

காரைக்கால் நகரப் பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :4 ஜூன் 2026, 3:55 am IST

காரைக்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு- 2027 செயல்பாடுகளின் முதல் கட்டமாக, கணக்கெடுப்பு அலுவலா்கள் வீடு தோறும் சென்று வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் சாா்ந்த தகவல்களை சேகரிக்கும் பணி காரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 30-ஆம் தேதி வரை இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

புதன்கிழமை காரைக்கால் பழைய மாா்க்கெட் தெருவில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுவதை முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இஷிதா ரதி ஆய்வு செய்தாா்.

அப்போது, இந்த கணக்கெடுப்பின் போது வீட்டு அமைப்பு, குடிநீா் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட மொத்தம் 33 விவரங்கள் சேகரிக்கப்படும். கேட்கப்படும் கேள்விகளுக்கு உண்மையான தகவல்களை அளிக்க வேண்டும் என ஆட்சியா் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டாா்.

மேற்பாா்வையாளா்கள், களப்பணியாளா்கள் உள்ளிட்ட சுமாா் 400 போ் மாவட்டம் முழுவதிலும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். இரண்டாம் கட்டமாக, 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.