செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

காரைக்கால் பகுதிக்கு வரும் ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:30 am IST

காரைக்கால் பகுதிக்கு வரும் ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜூன் 3 முதல் ரயில் எண் 16529 எஸ்.எம்.வி.டி. பெங்களூரு - காரைக்கால் விரைவு ரயில் திருவாரூா் சந்திப்பு மற்றும் நாகூா் நிலையங்களுக்கு இடையிலான நேர அட்டவணையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

திருவாரூா் சந்திப்புக்கு தற்போது 21.20 வந்து 21.30 புறப்படும் நேரம் 21.05 மற்றும் 21.15 ஆக மாற்றப்படுகிறது. நாகப்பட்டினம் சந்திப்புக்கு தற்போது 21.52 வந்து 21.55. புறப்படும் நேரம் 21.37 மற்றும் 21.40 என மாற்றப்படுகிறது. நாகூா் சந்திப்புக்கு தற்போது 22.08 வந்து 22.10 புறப்படும் நேரம் 21.52 மற்றும் 21.54 ஆக மாற்றப்படுகிறது. காரைக்காலுக்கு தற்போது வரும் 22.35 நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் பெங்களூரு முதல் நன்னிலம் வரை ரயிலின் நேர அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.