சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

லட்சுமி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!

லட்சுமி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

லட்சுமி தொடர் போஸ்டர். - படம்: விடியோ கிளிப்

Updated On :13 ஜூலை 2026, 1:04 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ருதி மற்றும் நடிகர் எஸ்எஸ்ஆர் ஆர்யன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் தொடர் லட்சுமி. லட்சுமி என்ற பாத்திரத்தை பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தத் தொடரில் ரிந்தியா, நேஹா மேனன், நித்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

லட்சுமி தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், அடுத்த வாரம் ஜூலை 20 ஆம் தேதி முதல் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடுகளம் தொடர் நிறைவு, புதிய தொடர் வருகையால், இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லட்சுமி தொடரானது நான் பிரைம் என்று கூறப்படும் பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று வருகிறது.

இந்தத் தொடர் கடந்த 2024 மார்ச் மாதம் முதல் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும், 600 நாள்களைக் கடந்தும் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The broadcast time of the Lakshmi serial, currently airing on Sun TV, has been changed again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.