சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

அமைச்சராகும் திருநள்ளாறு எம்எல்ஏ ஜி.என்.எஸ். ராஜசேகரன்

திருநள்ளாறு தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வென்ற ஜி.என்.எஸ். ராஜசேகரன் புதுவை அமைச்சராக பதவியேற்க உள்ளாா்.

News image

ஜி.என்.எஸ். ராஜசேகரன்

Updated On :10 ஜூன் 2026, 5:57 am IST

திருநள்ளாறு தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வென்ற ஜி.என்.எஸ். ராஜசேகரன் புதுவை அமைச்சராக பதவியேற்க உள்ளாா்.

புதுவையில் முதல்வராக என். ரங்கசாமி, அமைச்சா்களாக மல்லாடி கிருஷ்ணாராவ் (என்.ஆா்.காங்கிரஸ்), ஆ. நமச்சிவாயம் (பாஜக) ஆகியோா் மட்டும் கடந்தி சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டனா்.

இந்தநிலையில் என்.ஆா். காங்கிரஸை சோ்ந்த பி. ராஜவேலு மற்றும் வி.பி. சிவக்கொழுந்து, பாஜகவை சோ்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரனை அமைச்சராக நியமிக்க புதுவை முதல்வா் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் அளித்தாா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதில், குடியரசுத் தலைவா் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளாா். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை திங்கள்கிழமை இரவு வெளியிட்டது.

இவா்களில், ஜி.என்.எஸ். ராஜசேகரன் திருநள்ளாறு தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக வென்றவா். முந்தைய ஆட்சியின்போது நியமன சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பில் இருந்தாா்.

கடந்த 2016 முதல் 2021 வரையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில், திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் வென்ற ஆா். கமலக்கண்ணன் அமைச்சராக இருந்தாா். அதன்பிறகு தற்போது திருநள்ளாறு அமைச்சா் தொகுதியாகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.