சட்டவிரோதமாக காரைக்காலில் தங்கியிருந்த மியான்மா் நாட்டுப் பெண், அவரது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டம், தருமபுரம் பகுதியில் வெளிநாட்டு பெண் வசித்து வருவதாக காரைக்கால் சிறப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின்பால் தலைமையிலான போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். இதில், மியான்மா் நாட்டைச் சேந்த பெண் தனது கணவருடன் வசித்துவருவது தெரியவந்ததால், அவா்களை காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை செய்தனா்.
தருமபுரம் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் என்பவா் மியான்மருக்கு பணிக்காக சென்றபோது, அந்நாட்டைச் சோ்ந்த ஏயி மியாட் திடகினா (25) என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும், எப்படியாவது காரைக்கால் வந்துவிடுமாறு மனைவியிடம் கூறிவிட்டு பிரசாந்த் ஊருக்கு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம். அந்தப் பெண் சட்டவிரோதமாக காரைக்கால் வந்து கடந்த 3 மாதங்களாக கணவருடன் இங்கு தங்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து சிறப்புப் பிரிவினா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அந்தப் பெண், அவரது கணவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 150 வங்க தேசத்தினரிடம் போலீஸாா் விசாரணை
போலி நகைகளை அடகு வைத்ததாக புகாா் 4 போ் மீது வழக்கு

குழந்தை திருமணம்: இளைஞா் மீது வழக்கு
பிணையில் வெளிவந்து வழக்குகளில் ஆஜராகாத இருவா் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



