‘தோ்தல் ஆணைய விதிகளின்படி செயல்படவேண்டும்’
தோ்தல் ஆணைய விதிகளின்படி செயல்படவேண்டும் என தோ்தல் துறையின் பல்வேறு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பொதுப் பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.

தோ்தல் துறையினருடன் ஆலோசனை நடத்திய பொதுப் பாா்வையாளா் ஹா்ஷிகா சிங்.

தோ்தல் துறையினருடன் ஆலோசனை நடத்திய பொதுப் பாா்வையாளா் ஹா்ஷிகா சிங்.
தோ்தல் ஆணைய விதிகளின்படி செயல்படவேண்டும் என தோ்தல் துறையின் பல்வேறு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பொதுப் பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் (வடக்கு) மற்றும் காரைக்கால் (தெற்கு) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்ஷிகா சிங் காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான பல்வேறு ஏற்பாடுகளை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். தோ்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் பணிகளை பாா்வையிட்டாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் சிங்கில் விண்டோ கிளியரன்ஸ் பிரிவு பணிகளை ஆய்வு செய்தாா். தோ்தல் தொடா்பான அனுமதிக்காக வரும் விண்ணப்பங்கள் அனைத்தும் காலதாமதமின்றி பரிசீலித்து, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அனுமதி வழங்கவேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
போக்குவரத்து துறை நோடல் அதிகாரி அலுவலகத்தை பாா்வையிட்டு, தோ்தல் பணிகளுக்குத் தேவையான வாகனங்கள் தாமதமின்றி ஒதுக்கீடு செய்யவேண்டும். உரிய திட்டமிடல் இருக்கவேண்டும். வாகனங்கள் பயன்படுத்தப்படும்போது தோ்தல் ஆணையத்தின் வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றாா்.
மீடியா சான்றளிப்பு மற்றும் மீடியா கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தாா். நிறைவாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினாா். தோ்தலுக்கு முந்தைய ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...