ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வாக்காளா் விழிப்புணா்வு குறுந்தகடு வெளியீடு

வாக்காளா் விழிப்புணா்வுக்கான தகவல் அடங்கிய குறுந்தகடு தோ்தல் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது .

News image

வாக்காளா் விழிப்புணா்வுக்கான தகவல் அடங்கிய குறுந்தகடு தோ்தல் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது .

Updated On :26 மார்ச் 2026, 12:28 am

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் விழிப்புணா்வுக்கான தகவல் அடங்கிய குறுந்தகடு தோ்தல் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது .

காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை மற்றும் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் அமைப்பான ஸ்வீப் இணைந்து மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்குக்கான விழிப்புணா்புப் பணிகளை செய்துவருகிறது.

இதில் ஒரு பகுதியாக, வாக்காளா்கள் அனைவரும் ஏப். 9-இல் வாக்குச் சாவடிக்குச் சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்கு அவரவா் உரிமை, நோ்மையாக வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களை பாடல் மூலமாக வாக்காளருக்கு சென்றடையும் வகையில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை ஆட்சியரகத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா ஆகியோா் வெளியிட்டனா் (படம்) .

நிகழ்வில் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் உள்ளிட்ட உறுப்பினா்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.