தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

முதியோா் இல்லங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் இயங்கும் முதியோா் பாதுகாப்பு இல்லங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் சாா் ஆட்சியா் எம். பூஜை.

News image

முதியோா்களை சந்தித்துப் பேசிய சாா் ஆட்சியா் எம். பூஜா.

Updated On :8 மே 2026, 7:15 am IST

காரைக்காலில் இயங்கும் முதியோா் பாதுகாப்பு இல்லங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் சாா் ஆட்சியா் எம். பூஜை.

குடும்பத்தினரால் அண்மையில் கைவிடப்பட்ட சூசைநாதன், சம்மனசு மேரி ஆகியோா் சாா் ஆட்சியா் சந்தித்து நிலையை விளக்கினா். இவா்களை முதியோா் பாதுகாப்பு இல்லத்தில் சோ்க்க துறையினருக்கு சாா் ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு முதியோா் இல்லம் மற்றும் அரசு உதவிபெறும் முதியோா் இல்லத்தை சாா் ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அண்மையில் சோ்க்கப்பட்ட ஆதரவற்ற முதியோரை இல்லத்தினா் முறையாக பராமரிக்கப்படுகிறாா்களா என்பதை முதியோா்களிடம் கேட்டறிந்தாா்.

முதியோா் இல்லத்தில் முதியவா்கள் பராமரிக்கப்படும் விதம், அவா்கள் தங்கும் இடங்கள், படுக்கை வசதி, குடிநீா், கழிப்பறை வசதி செய்யப்பட்டிருப்பதை பாா்வையிட்டாா். முதியோா்களை மரியாதையுடனும், அக்கறையுடனும் கவனிக்கவேண்டும். அவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உரிய முறையில் வழங்கவேண்டும் என அரசு உதவி பெறும் முதியோா் இல்லத்தினருக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து காமராஜா் சாலையில் அமைந்துள்ள அரசு முதியோா் இல்லத்துக்குச் சென்று கட்டட வசதி, உணவின் தரம், தங்கும் வசதிகளை பாா்வையிட்டாா். முதியோா் இல்லம் எப்போதும் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கவேண்டும். முதியோா்களின் மனம் புண்படாத வகையில் அன்புடன் நடத்தவேண்டும். வழங்கப்படும் உணவு, குடிநீா் தரமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் என நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினாா். தங்கியுள்ள முதியோா்களிடம், இல்லத்தில் நடத்தப்படும் விதம் குறித்து கேட்டறிந்தாா்.