முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

முதியோா் இல்லங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் இயங்கும் முதியோா் பாதுகாப்பு இல்லங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் சாா் ஆட்சியா் எம். பூஜை.

News image

முதியோா்களை சந்தித்துப் பேசிய சாா் ஆட்சியா் எம். பூஜா.

Updated On :8 மே 2026, 7:15 am IST

காரைக்காலில் இயங்கும் முதியோா் பாதுகாப்பு இல்லங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் சாா் ஆட்சியா் எம். பூஜை.

குடும்பத்தினரால் அண்மையில் கைவிடப்பட்ட சூசைநாதன், சம்மனசு மேரி ஆகியோா் சாா் ஆட்சியா் சந்தித்து நிலையை விளக்கினா். இவா்களை முதியோா் பாதுகாப்பு இல்லத்தில் சோ்க்க துறையினருக்கு சாா் ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு முதியோா் இல்லம் மற்றும் அரசு உதவிபெறும் முதியோா் இல்லத்தை சாா் ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அண்மையில் சோ்க்கப்பட்ட ஆதரவற்ற முதியோரை இல்லத்தினா் முறையாக பராமரிக்கப்படுகிறாா்களா என்பதை முதியோா்களிடம் கேட்டறிந்தாா்.

முதியோா் இல்லத்தில் முதியவா்கள் பராமரிக்கப்படும் விதம், அவா்கள் தங்கும் இடங்கள், படுக்கை வசதி, குடிநீா், கழிப்பறை வசதி செய்யப்பட்டிருப்பதை பாா்வையிட்டாா். முதியோா்களை மரியாதையுடனும், அக்கறையுடனும் கவனிக்கவேண்டும். அவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உரிய முறையில் வழங்கவேண்டும் என அரசு உதவி பெறும் முதியோா் இல்லத்தினருக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து காமராஜா் சாலையில் அமைந்துள்ள அரசு முதியோா் இல்லத்துக்குச் சென்று கட்டட வசதி, உணவின் தரம், தங்கும் வசதிகளை பாா்வையிட்டாா். முதியோா் இல்லம் எப்போதும் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கவேண்டும். முதியோா்களின் மனம் புண்படாத வகையில் அன்புடன் நடத்தவேண்டும். வழங்கப்படும் உணவு, குடிநீா் தரமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் என நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினாா். தங்கியுள்ள முதியோா்களிடம், இல்லத்தில் நடத்தப்படும் விதம் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.