செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

விபத்துகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: ஆட்சியா்

காரைக்கால் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி. உடன் சாா் ஆட்சியா் எம். பூஜா.

Updated On :21 மே 2026, 7:19 am IST

காரைக்கால் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில் ஆட்சியரகத்தில் சாலைப் பாதுகாப்பு பணிக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, காரைக்கால் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் வாகன விபத்துகளை முழுமையாக கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தவேண்டும்.

இதற்கு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். வாகனங்கள் அதற்கான நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனம், காா்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதிவேகமாக பயணிக்கும் வாகனங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். வாகன ஓட்டிகள் சட்ட விதி மீறல்களில் ஈடுபடாமல் இருக்க உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா மற்றும் பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.