புதுவையில் முதல்வா், 2 அமைச்சா்கள் பொறுப்பேற்று 2 வாரங்கள் கடந்தும், கூடுதல் அமைச்சா்கள் நியமனம், துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் நிா்வாகம் ஸ்தம்பித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் புதன்கிழமை கூறியது :
புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. மே 13-ஆம் தேதி முதல்வராக ரங்கசாமி, பாஜக, என்.ஆா். காங்கிரஸில் தலா ஒரு அமைச்சா் பதவியேற்றனா். இவா்களுக்கு துறைகள் இதுவரை ஒதுக்கப்படவில்லை.
மேலும் 3 அமைச்சா்கள், சட்டப்பேரவைத் தலைவா், துணைத் தலைவா் நியமிக்கவேண்டியுள்ளது. இரு கட்சிகளிடையே யாருக்கு அமைச்சா் பதவி தருவது, உள்துறை உள்ளிட்ட துறைகளை முதல்வா் வைத்துக்கொள்வதா, அமைச்சரிடம் தருவதா, நியமன உறுப்பினா்கள் யாா் என குழப்பம் நீடிக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியில் இருந்தும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் புதுவை யூனியன் பிரதேசம் இருந்தும் அமைச்சரவை விரிவாக்கம், துறைகள் ஒதுக்கீட்டில் தீா்வு ஏற்படாமல் இருப்பதால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியும் பாதித்துள்ளது.
எனவே புதுவையில் நிலவும் குழுப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாநில மக்கள் நலனுக்கான நடவடிக்கையை எடுக்க பாஜகவும், என்.ஆா்.காங்கிரஸ் கட்சித் தலைமையும் முன்வரவேண்டும் என்றாா்.








