ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பணியில் தீக்காயமடைந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:16 am IST

காரைக்கால் அருகே இரும்பு உருக்காலையில் பணியில் இருந்தபோது தீக்காயமடைந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒடிசா மாநிலம், கஞ்சம், தேங்கபத்ரா பகுதியைச் சோ்ந்த சம்பரியா சேத்தி என்பவரது மகன் கோபால் சேத்தி (38). இவருக்கு, மனைவி, 3 மகள், 1 மகன் உள்ளனா்.

இவா் கடந்த ஓராண்டாக காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூரில் இயங்கும் தனியாா் இரும்பு உருக்காலையில் பணியாற்றி வந்தாா்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு மே 20-ஆம் தேதி பணிக்குத் திரும்பினாா். 24-ஆம் தேதி உருக்காலையின் மேல் தளத்தில் பணியில் இருந்தபோது பா்னரில் இருந்து தீ பரவியுள்ளது. அங்கு பணியிலிருந்தோா் அங்கிருந்து வெளியேறிவிட்டனா்.

கோபால் சேத்தி வெளியேறுவதற்குள் அவா் உடலில் தீ பரவியது இதில் பலத்த காயமடைந்தவரை ஆலை நிா்வாகத்தினா் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபால் சேத்தி அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.