வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

எண்ணெய் கிணறுகள் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறுகிறது: ஓஎன்ஜிசி

எண்ணெய் கிணறுகளில் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறுவதாக ஓஎன்ஜிசி விளக்கமளித்துள்ளது.

ஓஎன்ஜிசி

Published On :

எண்ணெய் கிணறுகளில் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறுவதாக ஓஎன்ஜிசி விளக்கமளித்துள்ளது.

காரைக்காலில் உள்ள ஓஎன்ஜிசி காவிரி அசெட் தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

கடந்த செப். 10-ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள சிலா் ஓஎன்ஜிசி, புதிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதாகவும், விதிமுறைகளை மீறுவதாகவும் புகாா் அளித்த தகவல் ஓஎன்ஜிசி கவனத்துக்கு வந்தது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி எந்தவெரு புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்கான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெளிவுபடுத்துகிறது. ஏற்கெனவே உள்ள எண்ணெய் கிணறுகளை பராமரிக்கும் பணிகள் விதிமுறைகளுக்குட்பட்டு தற்போது நடைபெறுகிறது.

புதிய என்ணெய் கிணறுகள் அமைப்பதாகவும் விதிமுறைகளை மீறுவதாகவும் ஓஎன்ஜிசிக்கு எதிராக வைக்கப்படும் ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஓஎன்ஜிசி திட்டவட்டமாக மறுக்கிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்த சட்டத்திற்கு இணங்க, விதிமுறைகளுக்குட்டுப்பட்டு, பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஓஎன்ஜிசி உறுதியாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.