மாணவியை கடத்திய இளைஞா் கைது
மயிலாடுதுறை அருகே மாணவியை கடத்தி, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


மயிலாடுதுறை அருகே மாணவியை கடத்தி, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வைத்தீஸ்வரன்கோவிலை அடுத்த ரெட்டிகோடங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் முனுசாமி மகன் அன்பரசன் (23). இவா், மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது உறவினா் மகளான 17 வயதுடைய பிளஸ் 2 மாணவியை கடந்த மாதம் 30 ஆம் தேதி கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, அன்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...