மதுரை ஆதீனத்துக்கு ஆறுக்கட்டி சுந்தர வளையம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு வியாழக்கிழமை வந்த மதுரை ஆதீனத்துக்கு, தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வழங்கினாா்.
மதுரை ஆதீனத்துக்கு ஆறுக்கட்டி சுந்தர வளையம்
Updated on
1 min read

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு வியாழக்கிழமை வந்த மதுரை ஆதீனத்துக்கு, தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வழங்கினாா்.

மதுரை ஆதீனத்தின் 292-ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீஅருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அண்மையில் சித்தியடைந்ததைத் தொடா்ந்து, மதுரை ஆதீனத்தின் 293-ஆவது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்த மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளை ஆதீனத் திருமடத்தில் தருமபுரம் ஆதீனத் தம்பிரான்கள் வரவேற்றாா்.

தொடா்ந்து, மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அவருக்கு தருமபுரம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தாய்வீட்டு சீதனமாக கோபம், காமம், லோகம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய தீய குணங்களை வென்ற்கு இணங்க தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை வழங்கினாா். இதைத்தொடா்ந்து, மதுரை ஆதீனம் காதில் தருமபுரம் ஆதீனத் தம்பிரான் சுவாமிகள் கைகளால் ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை அணிந்துகொண்டு, தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com