குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சீர்காழி புற்றடி மாரியம்மன்: பக்தர்களின்றி நடைபெற்ற தேரோட்டம்

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பக்தர்களின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

News image
Updated On :23 ஜனவரி 2022, 10:36 am IST


சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பக்தர்களின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

சீர்காழியில் பிரசித்தி பெற்ற புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை 1-ம் தேதி பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிறப்பு அலங்காரத்திலான சுவாமி வீதி உலா நாள்தோறும் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்தது. இதனிடையே, பத்தாம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். 

Story image

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாலை 4 மணி அளவில் தேர் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்கள் அனுமதியின்றி டிராக்டர் வாகனம் மூலம் கட்டி இழுக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.