தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில் கும்பாபிஷேகம்

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதில் நான்கு ஆதீன குருமகா சன்னிதானங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

News image

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில் கும்பாபிஷேகம்

Updated On :27 ஜனவரி 2022, 6:45 am

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதில் நான்கு ஆதீன குருமகா சன்னிதானங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் தருமபுரம் ஆதினத்தில் அணிகொண்ட கோதை அம்பாள் சமேத முல்லைவன நாதர் கோவில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை ஆறாம் கால யாகபூஜைகள் முடிவடைந்தது தொடர்ந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன.

Story image

தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதினம் கந்த பரம்பரை 28வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகாசந்நிதானம் சக்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

Story image

கும்பாபிஷேகத்தில் சிதம்பரம் மௌன குருசாமிகள், தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனார் கோவில் ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன திருக்கோவில்கள் தலைமை கண்காணிப்பாளர் மணி, கோவில் கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவின் தினமணி சார்பில் கும்பாபிஷேக விளம்பர சிறப்பிதழை தர்மபுரம் ஆதீனம் வெளியிட அதனை திருவாவடுதுறை ஆதினம், வேளாக்குறிச்சி ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.