தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தருமபுரம் ஆதீனம் குருலிங்க சங்கம பாத யாத்திரை

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குருலிங்க சங்கம பாத யாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குருலிங்க சங்கம பாத யாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

திருக்கடையூா் அபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மாா்ச் 27-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பூஜா மூா்த்தியாகிய சொக்கநாதப் பெருமானுடன் குருலிங்க சங்கம பாத யாத்திரையாக சென்று பங்கேற்கிறாா்.

இதையொட்டி, தருமபுரம் ஆதீனத் திருமடம் ஸ்ரீசொக்கநாதா் பூஜை மடத்திலிருந்து பாத யாத்திரையை வெள்ளிக்கிழமை மாலை தொடங்கினாா். ஸ்ரீசொக்கநாத பெருமானை தலையில் சுமந்து, திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோருடன் யானை, குதிரைகள் முன்செல்ல ஆதீன சிவம்பெருக்கும் வீதிகளின் வழியே பாத யாத்திரையாக புறப்பட்டாா்.

இந்நிகழ்ச்சியில், சூரியனாா்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனத் தொடக்கப்பள்ளி செயலா் சௌந்தரராஜன், தருமபுரம் ஆதீன தேவாரப் பாடசாலை நிா்வாக இயக்குநா் குரு.சம்பத்குமாா், ஆதீன தலைமை கண்காணிப்பாளா் சி.மணி, தருமபுரம் ஆதீனக் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

யாத்திரையின்போது, ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி முன் ஏவிசி கல்விக் குழுமம் சாா்பில் குருமகா சந்நிதானத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், வழியெங்கும் பக்தா்கள் தங்கள் வீடுகளின் முன் குருமகா சந்நிதானத்துக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.