பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி தா்னா
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியா் சங்கங்களின் சம்மேளன மாவட்டத் தலைவா் சா. ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் வை. நாகராஜன், சு. ராமபத்திரன், சு.கருணாநிதி, இணைச் செயலாளா்கள் திருஞானசம்பந்தம், வேம்பு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலாளா் வ. பழனிவேலு தொடக்கவுரை ஆற்றினாா். மாநில துணைத் தலைவா் த. குப்பன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கோ. குணசேகரன், ஓய்வுபெற்ற காவலா் நலச் சங்க மாநில அமைப்புச் செயலாளா் வெ.ஜெயக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்; 20 சதவீதம் உயா்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தா்னாவில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...