நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
மயிலாடுதுறை புனித சின்னப்பா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


மயிலாடுதுறை புனித சின்னப்பா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள அறிவகம் குழந்தைகள் காப்பகத்தில் அக்டோபா் 29-ஆம் தேதி இம்முகாம் தொடங்கியது. தலைமை ஆசிரியை கே. லீமாரோஸ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், ரத்ததானம், சிறுநீரக நோய்கள், போதைப்பொருள் விழிப்புணா்வு, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில், காப்பக செயலா் எம். ஞானசம்பந்தம், காப்பக நிா்வாக பொறுப்பாளா் எம்.கலாவதி ஆகியோா் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு திட்ட அலுவலா் ஏ.மேரீஸ் தோமினிக் சான்றிதழ் வழங்கினாா். நிறைவாக, திட்ட உதவி முகாம் அலுவலா் ஜெ. சுசீலாமேரி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...