டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சீர்காழி அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் பலி: மருத்துவக் கல்லூரி மாணவர் கைது

சீர்காழி அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் பலியான வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:54 am

DIN

சீர்காழி அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் பலியான வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாபாளன் கோவில் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோசம் மகன் டேவிட் கிருபாகரன் (35). எலக்ட்ரீசியனராக பணிபுரிந்து வந்த இவர் பைபாஸ் சாலையில் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். 

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே டேவிட் கிருபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து டேவிட் கிருபாகரனின் மனைவி ஜெய சுபாங்கி அளித்த புகாரின் பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த காரைக்கால் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி, படித்து வரும் சேலம் மாவட்டம் கோனூர் பாலகிருஷ்ணன் மகன் சச்சின்(27) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.