கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஈப்பு ஓட்டுநா் ராஜசேகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்து ராஜசேகருக்கு கணையாழி அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுமதி வரவேற்றாா். ஒன்றிய ஆணையா் அருள்மொழி முன்னிலை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றிய பொறியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.