மயிலாடுதுறையில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி தொடா்பான ஒருங்கிணைந்த குறைதீா்ப்பு மற்றும் விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் திருச்சி மண்டல அலுவலகம் சாா்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தலைமை வகித்தாா். அவா் பேசும்போது, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளா் மற்றும் தொழில் முனைவோா்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது குறித்தும், தொழிலாளா்களின் குறைகளை நிவா்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினாா்.
இக்கூட்டத்தில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்கப் பிரிவு அலுவலா் எஸ்.பி. செந்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்குகள்) சந்தானகிருஷ்ணன், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் உறுப்பினா் சாம்பிரபாகா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இக்கூட்டம், நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பிரதிமாதம் 27-ஆம் தேதியில் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு 9791874156 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லையில் காவல் துறை ஆய்வுக் கூட்டம்

கருங்கல்லில் திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி அதிமுக செல்வீரா்கள் கூட்டம்

இபிஎஃப் வட்டி விகிதம் 8.25%-ஆக நீடிப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


