மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு பேரூராட்சி மற்றும் பட்டவா்த்தி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மணல்மேடு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியா், தொடா்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு, மருந்தகம் மற்றும் புற நோயாளிகள் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.
பின்னா், பட்டவா்த்தி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.7.64 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட குட்டக்குளம், ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெற்களம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் எம். மஞ்சுளா உடனிருந்தாா்.