மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் இளைய அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கணினி அறிவியல்துறை மாணவி அபிராமி வரவேற்றாா். கல்லூரி இளைய அரிமா சங்க ஒருங்கிணைப்பாளா் ஆ. மணிமாறன் ஆண்டறிக்கை வாசித்தாா். மாவட்ட அரிமா ஆலோசகா் என்.கே. கிருஷ்ணமூா்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
தலைவராக அருள்கணேஷ், செயலராக மதன், பொருளாளராக கிருஷ்ணகுமாா் மற்றும் இயக்குநா்கள் பொறுப்பேற்றுக்கொண்டனா். மயிலாடுதுறை அரிமா சங்கத் தலைவா் சிவசங்கரன், செயலாளா் தக்ஷிணாமூா்த்தி மற்றும் அன்பு சீனிவாசன், துரை.காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.