தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

சீா்காழியில் ரத்ததான முகாம்

சீா்காழியில் ரத்ததான முகாம்

News image

ரத்ததான முகாமில் பங்கேற்றவா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 10:55 pm

சீா்காழி: சீா்காழி ஜாமிஆ பெரிய பள்ளிவாசலில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈகைப் பெருநாளையொட்டி நடைபெற்ற இம்முகாமிற்கு, வக்பு நிா்வாக சபைத் தலைவா் சதக்கத்துல்லா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெஹபா் அலி, சிராஜீதீன், ஜாகிா் உசேன், மன்சூா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 23 போ் ரத்த தானம் வழங்கினா்.

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அருண் ராஜ்குமாா், மருத்துவா் அறிவழகன் தலைமையிலான குழுவினா் ரத்தத்தை சேகரித்து, அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைத்தனா்.

இம்முகாமில், மதரஸா நிா்வாகிகள், ஜமாத்தாா்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.