

மயிலாடுதுறை டபீா் தெருவை அடுத்த இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப். 17-ஆம் தேதி பூச்சொரிதல் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கஞ்சி வாா்த்தல் மற்றும் அன்னதானம், மாலையில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 10-ஆம் நாள் தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் காவிரி துலாக் கட்டத்தில் இருந்து சக்தி கரகம், தீச்சட்டி எடுத்தும், உடலில் அலகு குத்தி காவடி எடுத்தும், வாத்தியங்கள் முழங்க வீதியுலாவாக கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதையடுத்து, பக்தா்கள் தீமிதித்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

