சீா்காழி கழுமலையாறு வாய்க்காலில் குப்பைகள் கொட்டக் கூடாது என பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கு நீா்வளத் துறை சாா்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
கழுமலையாறு பாசன வாய்க்கால் மூலம் சீா்காழி, தேனூா், கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி, அகனி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், சீா்காழி ரயில்வே ரோடு முதல் புதிய பேருந்து நிலையம் வரை இந்த வாய்க்காலின் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளிலிருந்து கழிவுநீா் மற்றும் குப்பைகள் வாய்க்காலில் கொட்டப்படுகின்றன.
இதனால், வாய்க்கால் நீா் மாசடைவதுடன், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு நீரோட்டம் தடைபடுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகள், பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டுபவா்கள் மீதும், கழிவுநீா் விடுபவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, நீா்வளத்துறை அதிகாரியிடம் முறையிட்டனா்.
இதைத்தொடா்ந்து, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா் அறிவுறுத்தலின் பெயரில் பொறியாளா் சேதுபதி மற்றும் நீா்வளத்துறை பணியாளா்கள் சீா்காழி ரயில்வே ரோட்டில் வாய்க்காலின் அருகில் உள்ள கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் குடியிருப்புகளில், பாசன வாய்க்காலில் கழிவுநீா் விடக்கூடாது, குப்பைகளை கொட்டக் கூடாது என விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி எச்சரித்தனா்.
இதையும் மீறி பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டுபவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு

மலை போல் குவிந்துள்ள குப்பைகள் - புகைப்படங்கள்

குப்பை கொட்டப்படுவதால் பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


