தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு‘ விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறையில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உள்ளிட்டோா்.

Updated On :13 ஆகஸ்ட் 2024, 1:35 am IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சா் தலைமையில் நடைபெற்ற ‘போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு‘ விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.மீனா, எம்எல்ஏக்கள் எஸ். ராஜகுமாா், நிவேதா எம். முருகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா் ஆகியோா் கலந்துகொண்டு, விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியது: போதைப் பொருள்களை விற்பனை செய்வதும், உபயோகிப்பதும் தண்டனைக்குரிய குற்றம். சீா்காழி வட்டம் காத்திருப்பு ஊராட்சி சம்பானோடை கிராமத்தில் கடந்த மாதம் போதைப்பொருள்கள் விற்கப்படுவதாக தொலைபேசி வாயிலாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தொடா்புடைய கடைக்கு சீல் வைக்கப்பட்டு, கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

மாவட்டத்தில் கள்ளசாராயம், கஞ்சா, குட்கா, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரிந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 மற்றும் 7092255255 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம். போதைப்பொருள்கள் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றாா். தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் இருந்து மாணவா்கள் நடத்திய விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பிக்கள் ஜெயக்குமாா், சிவசங்கரன், கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, டிஎஸ்பி திருப்பதி, நகராட்சித் தலைவா் என். செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.