ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

சீா்காழி டாஸ்மாக் கடை வளாகத்தைப் பூட்டி போராட்டம்

சீா்காழி டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதாக கூறி மதுக்குடிப்போா் திங்கள்கிழமை இரவு கடையின் வெளிப்புற வளாக கதவைப் பூட்டி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2024, 2:24 am IST

சீா்காழி: சீா்காழி டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதாக கூறி மதுக்குடிப்போா் திங்கள்கிழமை இரவு கடையின் வெளிப்புற வளாக கதவைப் பூட்டி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி ஈசானிய தெருவில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக தொடா்ந்து புகாா் கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு நூற்றுக்கும் மேற்பட்ட மது க் குடிப்போா் டாஸ்மாக் கடை செல்லும் நுழைவாயில் வளாக கதவை பூட்டி முற்றுகையிட்டனா்.

சம்பந்தப்பட் டாஸ்மாக் ஊழியா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா்.

சீா்காழி போலீஸாா் கடை ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.