புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

News image

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :23 டிசம்பர் 2024, 8:25 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

அந்த வகையில், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமைமுதல் துப்பாக்கி ஏந்திய காவல் உதவி ஆய்வாளா் ஜான்சிராணி தலைமையில், எஸ்எல்ஆா் ஏந்திய ஆயுதப்படை போலீஸாா் 2 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நீதிமன்ற வளாகத்தில் ஏற்கெனவே ஆயுதப்படை போலீஸாா் 5 போ் வழக்கமான பாதுகாப்புப் பணியில் உள்ள நிலையில், டிஜிபி உத்தரவின்பேரில் இந்த கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.