கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசு மருத்துவமனை குறைபாட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சீா்கேட்டைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினா்.

Updated On :30 டிசம்பர் 2024, 6:47 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சீா்கேட்டைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் டி.ஜி. ரவிச்சந்திரன், நகரச் செயலாளா் டி. துரைக்கண்ணு ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி. மேகநாதன், ஏ.ஆா். விஜய், எம். குமரேசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவா்களை நியமிக்க வேண்டும்; இதயநோய், நரம்பியல், நுரையீரல், சிறுநீரக சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவா்களை உடனடியாக பணியமா்த்த வேண்டும்; சி.டி, எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவிகளை இயக்க கதிரியக்க நிபுணா்களை பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேஷ், உஷாராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல், மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளின் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.