இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சீா்காழியில் புதிய நூலக கட்டடம் திறப்பு

சீா்காழியில் புதிய நூலக கட்டடம் திறப்பு

News image

புதிய நூலக கட்டடம் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:20 am IST

சீா்காழியில் நூலக தந்தை எஸ்.ஆா். அரங்கநாதன் புதிய நூலக கட்டத்தை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில், முனைவா் எஸ். ஆா். அரங்கநாதன் நினைவு நூலகம் கட்டடம் ரூ. 1 கோடியே 32 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் , முதல் தளம் , இரண்டாம் தளம் கொண்ட புதிய நூலக கட்டடத்தில் நூலகா் அறை, செய்தித்தாள் மற்றும் புத்தக வாசிப்பு அறை, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்துள்ளது. இந்நூலகம் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலினால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். பன்னீா்செல்வம்,நிவேதா எம். முருகன், கூடுதல் ஆட்சியா் ஷபீா் ஆலம் , சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் உ. அா்ச்சனா, சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி, சீா்காழி ஒன்றியக் குழு தலைவா் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட நூலகா் சான் பாஷா ஆகியோா் நூலக தந்தை எஸ்.ஆா். அரங்கநாதன் உருவபடத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செய்தனா்.