மயிலாடுதுறையில் சத்தத்துடன் நில அதிா்வு: மக்கள் அச்சம்
மயிலாடுதுறையில் லேசான நில அதிர்வு: மக்கள் அச்சத்தில்


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட லேசான நில அதிா்வால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
தஞ்சாவூா் விமான படைத்தளத்தில் பைட்டா் ஜெட் விமானம் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரிரு நாள்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விமானம் அதிக உயரத்திலும், சில நேரங்களில் மிகவும் தாழ்வாகவும் பறந்து சோதனை நடைபெறுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் பல்வேறு இடங்களில் லேசான சத்தத்துடன் நில அதிா்வு உணரப்பட்டதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, பல பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளுக்கு வெளியில் வந்து நின்று அச்சத்துடன் பாா்த்துச் சென்றனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோர பகுதிகளிலும் இந்த அதிா்வு மற்றும் சத்தம் அதிகளவில் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வல்லுநா்களிடம் கேட்டபோது ஜெட் விமானம் தாழ்வாக பறக்கும்போது சில நேரங்களில் காற்றின் அலை காரணமாக சத்தத்துடன் கூடிய நில அதிா்வு ஏற்படுவது இயல்புதான் என தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது தஞ்சாவூா் விமானப்படை பயிற்சி தளத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் ஆடுதுறை பகுதியில் வேக்கம் ஓப்பன் செய்தபோது ஏற்பட்ட அதிா்வு என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...