தரங்கம்பாடியில் ஜூன் 19-ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடக்கம்
தரங்கம்பாடியில் ஜூன் 19-ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடக்கம்


தரங்கம்பாடியில் ஜூன் 19-ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உங்களைத் தேடி, உங்கள் ஊரில் எனும் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்களால் தரங்கம்பாடி வட்ட அளவில் ஜூன் 19-ஆம் தேதி காலை 9 முதல் ஜூன் 20-ஆம் தேதி காலை 9 மணி வரை தங்கி கள ஆய்வில் ஈடுபடுகின்றனா்.
அப்போது, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, அனைத்து நலத்திட்டங்களையும் தடையின்றி செயல்படுத்தப்படுகிறது. எனவே, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முதல் அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களிடம் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...