விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தரங்கம்பாடியில் ஜூன் 19-ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடக்கம்

தரங்கம்பாடியில் ஜூன் 19-ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடக்கம்

Updated On :14 ஜூன் 2024, 2:07 am

தரங்கம்பாடியில் ஜூன் 19-ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உங்களைத் தேடி, உங்கள் ஊரில் எனும் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்களால் தரங்கம்பாடி வட்ட அளவில் ஜூன் 19-ஆம் தேதி காலை 9 முதல் ஜூன் 20-ஆம் தேதி காலை 9 மணி வரை தங்கி கள ஆய்வில் ஈடுபடுகின்றனா்.

அப்போது, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, அனைத்து நலத்திட்டங்களையும் தடையின்றி செயல்படுத்தப்படுகிறது. எனவே, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முதல் அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களிடம் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.